Search This Blog

Sunday, May 31, 2015

கண்ணம்மாவுக்கு பிடித்தது - உண்மை பேசுதல்


கண்ணம்மா........

உனக்கு பிடித்த  உண்மை பேசுதல் பற்றி எழுதுகிறேன்
பொய் என்ற வார்த்தை கூட உனக்கு பிடிக்காது
அதனால் அவ்வாக்கை  முடிந்தவரை
இந்த பதிவிலிருந்து களைந்து  விட்டேன்

நீ அசிக்கடி என்னிடம் உண்மையே பேசவேண்டும்
என்று அன்பு கட்டளை இடுவாய் அது ஏனென்றும்
குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிதருவாய்
உண்மை பேசாதவர்கள்  நம்பதகுந்தவர்கள் அல்ல
உண்மைக்கு புறம்பாக பேசுபவர்களோடும்
பேசு என்று வற்புறுத்துவோர்களுடனும்
உறவாடுதல் நல்லதல்ல என்றும் சொல்லுவாய்
கண்கள் நோக்கி உண்மை பேச முடியதவன்
கோழை என்றும் உண்மை பேசுவது ஒருவனுக்கு
மேலும் அழகை சேர்க்கும் என்றும்
நாம் உண்மையாக நேசிபவர்களிடம்
உண்மையை தவிர வேறேதும் பேசக்கூடது
அப்படியே பேசினால் அது அவரை
ஏமாற்றுவதாகும் என்றும் சொல்லுவாய்

நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களை
ஏமாற்றுவது பஞ்ச மஹா பவம் என்பாய்
பொய்யர்களை கண்டால் பொங்கி எழுவாய்
ஒவ்வொரு முறையும்  உண்மை சொல்லும்
போதும் உன் முகம் பூவாக மலரும்
பொய் சொல்லும் போது வாடி வருந்தும்

மற்றவர்களை நம்ப வைத்து நாம் என்ன சாதித்தோம்
நம் வழக்கை தானே  முடங்கி போகும்
நீ சொன்னது இன்னும் என் காதுகளில்
ரீங்கரமிட்டு கொண்டிருக்கிறது
கண்ணம்மா ........

அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் 
அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே

வழக்கை வாழ்வதற்கே !
எனதுயிரே கண்ணம்மா .......



No comments:

Post a Comment